ஜெய்பீம் படத்தில் சூர்யாவின் நடிப்புக்கு உலகளவில் அங்கீகாரம் கிடைத்தும் இப்படத்தில் நடித்தவர்களுக்கு சைமா விருது கிடைக்காமல் போனமையாதல் ரசிகர்கள் கடும் குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.
தமிழ் சினிமாவில் தற்பொழுது தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சூர்யா. இவர் கதாநாயகனாக மட்டுமல்லாது விக்ரம் படத்தில் ரோலெக்ஸ் என்னும் நெக்கடிவ் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.இப்படத்தில் மூலம் இவரது மார்க்கெட் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கான விருதுகள் நேற்று வழங்கப்பட்டன. இதில் கடந்த ஆண்டு தமிழில் வெளியாகி சக்கைப்போடு போட்ட டாக்டர், சார்பட்டா பரம்பரை, மாநாடு, மாஸ்டர் ஆகிய படங்கள் அதிகளவில் விருதுகளை வென்று குவித்தன.
இருப்பினும் இதில் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ஓடிடி-யில் வெளியான ஜெய் பீம் படத்துக்கு ஒரு விருது கூட வழங்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு வெளிவந்த படங்களில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது ஜெய் பீம் தான். இருளர் பழங்குடியினரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருந்தார் டி.ஜே.ஞானவேல்.
இதில் நடிகர் சூர்யா பழங்குடியினருக்காக வாதாடும் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இப்படத்தில் சூர்யாவின் நடிப்புக்கு உலகளவில் அங்கீகாரம் கிடைத்தது. ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் கூட இறுதிவரை முன்னேறி நூலிழையில் அந்த வாய்ப்பு பறிபோனது.
இந்த நிலையில் இப்படத்தில் கதாபாத்திரமாக வாழ்ந்திருந்த மணிகண்டன் மற்றும் லிஜோமோல் ஆகியோருக்கும் சைமா விருது விழாவில் ஒரு விருது கூட வழங்கப்படாததற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!