• Sep 20 2024

ஷாருக் கான் படத்தின் ஷூட்டிங் மும்பையில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்டது ஏன்..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் டாப் இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் அட்லீ. இவர் 'ராஜா ராணி' என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் வெற்றி இயக்குநராக அறிமுகமாகி இருந்தார். தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்த அட்லீ, அடுத்ததாக விஜய்யுடன் கைகோர்த்து 'தெறி, மெர்சல், பிகில்' என பல ஹிட் படங்களை கொடுத்தார்.

இதனை தொடர்ந்து தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' என்ற படத்தை இயக்கி வருகின்றார்.

இத்  திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி. இதையடுத்து சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு மற்றும் தலைப்பு ‘ஜவான்’ என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி சில நாட்களாக நடந்து வருகிறது. எனினும் இந்நிலையில் மும்பையில் இருந்து இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னைக்கு மாற்றப்பட்டதற்கு மும்பையில் தற்போது கடுமையான மழை பெய்துவருவதுதான் என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement