• Sep 20 2024

'பொன்னியின் செல்வன்' புகைப்படத்தை வெளியிட்ட ஜெயம்ரவி... பதிலுக்கு கமெண்ட் செய்த மனைவி ஆர்த்தி..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி. ரவி என்ற பெயரைக் கொண்ட இவர் தனது அண்ணனின் இயக்கத்தில் அமைந்த 'ஜெயம்' என்னும் படத்தின் மூலமாகவே தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதன் காரணமாகவே அன்றிலிருந்து இன்றுவரை ஜெயம் ரவி என அழைக்கப்பட்டு வருகின்றார். 


மேலும் தமிழில் கால் பதிப்பதற்கு முன்னர் தெலுங்கு திரையுலகில் 1993-ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னரே ஹீரோவாக மாறியவர் ஜெயம் ரவி. தற்போது இவர் 40 வயதை எட்டி விட்டாலும் இன்னும் காலேஜ் பாய் போல் யங் லுக்கிலேயே தான் இருந்து வருகின்றார். 

ஜெயம் ரவியின் குடும்ப வாழ்க்கை பற்றி பார்க்கும் போது, இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆர்த்தியை காலேஜ் நிகழ்வொன்றில் தான் ஜெயம் ரவி முதன்முதலில் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இத்தம்பதியினருக்கு தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர்.

குடும்பம், நடிப்பு எனப் பிஸியாக இருந்து வருகின்ற ஜெயம் ரவி, தன்னுடைய அறிமுகப் படத்திலிருந்து இன்றுவரை ஏறத்தாள 25 இற்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கின்றார்.

அதுமட்டுமல்லாது தற்போது இவரின் நடிப்பில் மணிரத்னத்தின் கனவுப்படமான 'பொன்னியின் செல்வன்' படம் வெளியாக இருக்கின்றது. இவருடன் இணைந்து இப்படத்தில் மேலும் பல பிரபலங்களும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


இரண்டு பாகங்களாக உருவாகவுள்ள இப்படத்தினுடைய முதல் பாகமானது செப்டெம்பர் 30-ஆம் திகதி பிரமாண்டமாக வெளியாக இருக்கின்றது. இதனையொட்டி ஜெயம் ரவி தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவொன்றினை இட்டிருக்கின்றார். 


அதில் பொன்னியின் செல்வன் தோற்றத்தில் இருக்கும் தன்னுடைய புகைப்படத்தை பதிவிட்டு அதற்கு கீழே "செப்டெம்பர் 30 வருகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கின்றார். இதனைப் பார்த்த அவரின் மனைவி ஆர்த்தி பதிலுக்கு "நாங்கள் காத்திருக்கின்றோம்" என ரிப்ளே செய்திருக்கின்றார். 

இதனைப் பார்க்கும் போது ரசிகர்கள் மட்டுமல்லாது பிரபலங்களின் ஒட்டு மொத்தக் குடும்பமும் இப்படத்தினை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றமை புரிகின்றது.  

Advertisement

Advertisement