• Sep 20 2024

மண்டபத்தை விட்டு வெளியேறிய அபிராமி... கார்த்திக் கையால் தீபா கழுத்தில் மீண்டும் தாலி ஏறுமா..? விறுவிறுப்பான இறுதிக் கட்டத்தில் 'கார்த்திகை தீபம்'..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று 'கார்த்திகை தீபம்'. அதிரடித் திருப்பத்துடன் இந்த சீரியலானது தற்போது விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


அதில் அபிராமி "நான் இனிமேல் இருக்க மாட்டேன், நீங்க இருந்து கல்யாண வேலை எல்லாவற்றையும் பாருங்கள்" எனக் கூறி மகனின் திருமணம் தடைப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மண்டபத்தை விட்டு வெளியேறுகின்றார்.


மறுபுறம் தீபா தாலியைக் கழட்டி சாமிக்கு முன்னாள் வைக்கின்றார். இவ்வாறாக தீபா கழட்டிய தாலி அவர் கழுத்தில் கார்த்திக் கையால் மீண்டும் ஏறுமா" என்பதை பொறுத்திருந்து பாப்போம். இந்நிலையில் கார்த்திக்-தீபா திருமணம் விறுவிறுப்பான இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement