• Sep 20 2024

ஆல்யா மானசா- சஞ்சீவ் ஜோடி மீண்டும் இணைவார்களா..? சோகத்தில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

வெள்ளித்திரையில் அறிமுகமாகின்ற நட்சத்திரங்கள் எப்படி மக்கள் மத்தியில் வெகு விரைவாக பிரபல்யமாகின்றார்களோ அந்தளவிற்கு சின்னத்திரையில் அறிமுகமாகின்ற நடிகர் நடிகைகளும் வெகு விரைவாக ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமாகி விடுவார்கள்.

இந்தவகையில் தமிழ் சின்னத்திரையை பொறுத்த வரையில் இப்போது ஏராளமான நடிகர், நடிகைகள் வந்துவிட்டார்கள். புதிய நடிகர்கள் திரைக்குள் வர வர இதற்கு முன் நடித்துவந்த நடிகர், நடிகைகளுக்கு வழங்கப்படுகின்ற வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. இதனால் மக்கள் அந்த நட்சத்திரங்களை ரொம்பவே மிஸ் பண்ணுகின்றார்கள்.

இவ்வாறாக சின்னத்திரையின் மூலமாக அறிமுகமாகி பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மனங்களை கொள்ளை கொண்ட ஒரு ஜோடியே ஆல்யா-மானசா தம்பதியினர். அதாவது ஒரு சில வருடங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்ட ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும் 'ராஜா ராணி' என்ற தொடரில் இணைந்து நடித்திருந்தார்கள். சீரியலில் இணைந்து நடித்த இவர்கள் இருவரும் இப்போது நிஜ வாழ்க்கையிலும் இணைந்துவிட்டார்கள்.

இத்தம்பதியினரின் சிறந்த குடும்ப வாழ்க்கையின் பலனாக இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள். சீரியலில் நடிக்கும் பொது எவ்வளவு சந்தோசமாக இருந்தார்களோ அதே சந்தோசத்தோடு தமது குடும்ப வாழ்க்கையையும் நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவர் தொடர்பாகவும் ஒரு தகவல் வெளி வந்திருந்தது. அதாவது இருவரும் மறுபடியும் ஒன்றாக இணைந்து 'சரவணன்-மீனாட்சி' என்ற தொடரின் புதிய பாகத்தில் நடிக்கிறார்கள் என தகவல்கள் வெளியாகி இருந்தன.

இது தொடர்பாக ரசிகர்கள் பலரும் கேள்வி கேட்டு வந்திருந்தனர். இந்நிலையில் இந்த செய்தி உண்மை அல்ல வதந்தி என்ற உண்மை வெளியாகி இருக்கின்றது. ஆல்யா-சஞ்சீவ் ஐ மீண்டும் சின்னத்திரையில் ஜோடியாக பார்க்கவிருந்த ரசிகர்களுக்கு இந்த விடயம் கடும் சோகத்தை கொடுத்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement