• Sep 20 2024

மீண்டும் சீரியலில் இணையவுள்ளாரா ஆல்யா மானஷா?- செம குஷியில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் தமது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த பல நடிகைகள் இருக்கின்றனர்.இவர்களில் மிகவும் முக்கியமானவர் தான் ஆல்யா மானசா. இவர் ராஜா ராணி என்னும் சீரியல் மூலம் பிரபல்யமானதோடு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்துக் கொண்டவர்.

இந்த சீரியல் கதாநாயகனாக நடித்து வந்த சஞ்சீவை்வைக் காதலித்து திருமணம் செய்துள்ளார்.நட்சத்திர ஜோடியாக வலம் வரும் இவர்களுக்கு அய்லா சையத் என்ற பெண் குழந்தை உள்ளது.இதையடுத்து ராஜா ராணி சீரியலின் இரண்டாவது சீசனில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இதைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆல்யா கர்ப்பமானதால் சீரியலில் இருந்து விலகினார்.தற்பொழுது இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆல்யா, தனது கணவருடன் இணைந்து ஒரு யூடியூப் சேனலையும் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதில், இரண்டாவது முறையாக குழந்தை பிறந்துள்ளதால் உடல் எடை கூடியுள்ளேன். தற்போது சீரியலில் நடிக்க வேண்டுமென்றால் உடல் எடையை குறைக்க வேண்டும். சரியாக சாப்பிட முடியாது. அதனால் சில மாதங்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் நடிக்கவுள்ளேன் என்று கூறினார். ஆல்யா மானசாவின் இந்த பதில் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement