தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடும் சீரியல் தான் ராஜா ராணி சீசன் 2.
இந்த சீரியலில் கதாநாயகனாக சித்துவும் கதாநாயகியாக ஆல்யா மானசாவும் நடித்து வந்தனர். பின்பு குழந்தை பிறந்த காரணத்தால் ஆல்யா இந்த சீரியலில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக ரியா என்பவர் நடித்து வருகின்றார்.
மேலும் இந்த சீரியலில் வில்லி காரக்டரில் அர்ச்சனா என்பவர் நடித்து வருகின்றார். இவரும் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக கூறப்படுகின்றது. அதற்கு அமைய அர்ச்சனாவும் கடந்த ஒரு வாரமாக சீரியலில் என்ட்ரி கொடுக்காமல் இருக்கின்றார்.
இதனால் இவர் சீரியலில் இருந்து விலகி விட்டாரோ என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர் . ஆனால் சீரியலைத் தவிர இன்னும் சில ஷோக்களில் கமிட்டானதால் தானாம் இவர் கடந்த வாரம் சீரியல் என்ட்ரி கொடுக்கவில்லையாம். அதனை முடித்து விட்டு இந்த வார சூட்டிங்கிற்காக அவர் கலந்து கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எனவே அடுத்த வாரத்திலிருந்து இவர் இந்த சீரியலில் மீண்டும் நடிக்க வருவார் என்று கூறப்படுவதையும் காணலாம்.
பிற செய்திகள்
- பாரதி மேல் இருந்த கோபத்தை லட்சுமி மீது காட்டும் கண்ணம்மா- வெண்பாவுக்கு ரோஹித் கொடுத்த ஷாக்
- 23 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் ஜோடி சேரும் நடிகை ரம்யா கிருஷ்ணன்- தலைவர் 169 படத்தின் புதிய அப்டேட்
- ஐந்தே நாட்களில் விக்ரம் படம் செய்த வசூல் சாதனை -கொண்டாடும் ரசிகர்கள்..!
- விக்ரம் படத்தில் சூர்யாவின் காட்சி வரும் போது திடீரென பற்றி எரிந்த திரையரங்கு- அலறியடித்து ஓடிய ரசிகர்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!