விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் இறுதிக் கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா.இந்த சீரியல் தற்பொழுது பீஸ்ட் மூவி சாயலில் சென்று கொண்டிருக்கிறது.மாலுக்கு பதிலாக இங்கு ஆஸ்பிட்டல். மத்திய அமைச்சர் உயிரோட வேண்டும், அவரை ஆப்ரேஷன் செய்து காப்பாற்ற வேண்டும் என செக் வைக்கின்றனர் தீவிரவாதிகள்.
டாக்டர் போல் உள்ளே போன போலீஸையும் அவர்கள் கண்டுப்பிடித்து கொலை செய்து விட்டனர்.ஆஸ்பிட்டலில் வேலை செய்யும் நர்ஸ்கள், பொதுமக்கள், பாரதியின் குடும்பத்தை சேர்ந்த கண்ணம்மா, லட்சுமி, ஹேமா, அகில், அஞ்சலி எல்லோருமே ஆஸ்பிட்டலில் மாட்டிக் கொண்டனர்.
மேலும் அமைச்சரை ஆப்ரேஷன் செய்து காப்பாற்றுவதாக பாரதியும் சம்மதித்து விடுகின்றார்.இவர்கள் அனைவரையும் பாரதி தான் காப்பாற்ற வேண்டும். வீட்டில் இருக்கும் சௌந்தர்யாவும் வேனுவும் இதை நினைத்து பதறி துடிக்கின்றனர். ஒருவேளை ஆப்ரேஷன் தோல்வியில் முடிந்து விட்டால் லட்சுமி - ஹேமாவை முதலில் கொன்று விடுவோம் என தீவிரவாதிகள் பாரதியை மிரட்டுகின்றனர்.
தற்போது அமைச்சருக்கு பாரதி ஆப்ரேஷன் செய்கிறார்.ஆனால் பாசிடிவ்வான எந்த மூவும் இல்லை.இதனால் எப்படி தீவிரவாதிகளிடம் இருந்து இவர்கள் தப்பிக்க போகின்றார் என்ற குழப்பமான ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.
Listen News!