• Sep 21 2024

ஆயிஷாவுக்கு எதிராக பிக்பாஸ் டீம் சதித்திட்டம் தீட்டலாமா?- கொந்தளிக்கும் ரசிகர்கள்- ஆண்டவர் வந்து நியாயம் தருவாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 ஆனது ஆரம்பித்து விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் ராம் மற்றும் ஆயிஷா ஆகியோரே வெளியேறுவார் என்று கூறப்பட்டு வருகின்றது.இதனால் ஆயிஷாவின் ரசிகர் பிக்பாஸின் மீது கடுமையான கோபத்தில் உள்ளனர்.

அதாவது இந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் கதாப்பாத்திரங்களாகவே மாறி போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில்  ஆயிஷா தன் மேனரிஸம், பேச்சு, டான்ஸ் என்று அனைத்திலும் சிம்பு போன்றே செய்து காட்டி பார்வையாளர்களின் பாராட்டையும், கைதட்டல்களையும் பெற்றுவிட்டார்.


ஆயிஷா தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்தபோதிலும் அவரை பிக் பாஸ் வேண்டும் என்றே ஓரங்கட்டுவதாக பார்வையாளர்கள் விமர்சித்துள்ளனர். ஆயிஷாவின் உடை தாமதமாக வந்தது. அவரின் டான்ஸ் பெர்ஃபாமன்ஸை எடிட்டட் வெர்ஷனில் காட்டவில்லை. ஆயிஷாவின் நடிப்பு வேற லெவலில் இருந்தது. ஆனால் அதையும் டிவியில் காட்டவில்லை. ஆயிஷாவின் மூன்று நிமிட பெர்ஃபாமன்ஸை கூட காட்டவில்லை என்கிறார்கள் பிக் பாஸ் பார்வையாளர்கள்.

ஆயிஷாவை வெளியேற்றுவது என்று பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துவிட்டார்கள். அதனால் தான் அவரின் பெர்ஃபாமன்ஸை ஒளிபரப்பாமல் இப்படி நடந்து கொள்கிறார்கள். ஹவுஸ்மேட்ஸ் தான் ஃபேவரிட்டிசம் பார்க்கிறார்கள் என்றார்கள். ஆனால் ஹவுஸ்மேட்ஸ் அல்ல மாறாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள் என பார்வையாளர்கள் கொந்தளித்துள்ளனர்.


ஒரு போட்டியாளருக்கு எதிராக பிக் பாஸே இப்படி சதி செய்வது நியாயம் இல்லை. இந்த வார இறுதியில் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் உலக நாயகன் கமல் ஹாசன் ஆயிஷாவுக்கு நடப்பது பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். ஆயிஷாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இந்த வாரம் அவரை வெளியேற்றக் கூடாது. அவருக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கை சிறப்பாக செய்துள்ளார் என பிக் பாஸ் பார்வையாளர்கள் கூறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement