• Sep 20 2024

மீண்டும் சேர்ந்து வாழப்போகிறாரா ஜஸ்வர்யா ரஜனிகாந்த்-திடீரென கண்டிஷன் போட்ட தனுஷ்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் மீண்டும் சேர்ந்து வாழப் போகிறார் தனுஷ் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் புது கன்டிஷன் போட்டிருக்கிறாராம்.

 ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் தனுஷ் கூறிய விஷயம் அவரை அதிர்ச்சி அடைய வைத்துவிட்டதாக தற்போது தகவல் தீயாய் பரவி வருகின்றது.


தனுஷும், ஐஸ்வர்யாவும் காதல் திருமணம் செய்து  18 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தார்கள். யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் கடந்த ஜனவரி மாதம் பிரிவை அறிவித்தார்கள். இதையடுத்து அண்மையில் நடந்த பேச்சுவார்த்தையை அடுத்த மீண்டும் சேர்ந்து வாழ்வது என்று தனுஷும், ஐஸ்வர்யாவும் முடிவு செய்ததாக கூறப்படுகின்றது.

தனுஷ், ஐஸ்வர்யாவின் திருமண நாளான நவம்பர் 18ம் தேதி மீண்டும் சேரும் அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று பேச்சு  தற்போது கிளம்பியது. இந்நிலையில் நாம் நல்ல நண்பர்களாக இருப்போம், கணவன்-மனைவி என்கிற உறவு வேண்டாம். நான் இப்பொழுது தான் சுதந்திரமாக இருக்கிறேன் என்று ஐஸ்வர்யாவிடம் தனுஷ் கூறியதாக தகவல் கசிந்துள்ளது.

அப்பா ரஜினிகாந்துக்காகவும், குழந்தைகளுக்காவும் மீண்டும் தனுஷுடன் சேர்ந்து வாழ முடிவு செய்தார் ஐஸ்வர்யா. இந்நிலையில் எனக்கு தோழியாக இருப்பாயா என்று கேட்டுவிட்டாராம் தனுஷ். குழந்தைகளுக்காக தனுஷின் நிபந்தனையை ஏற்று மனைவியாக இல்லாமல் தோழியாக இருப்பாரா ஐஸ்வர்யா என்கிற கேள்வி எழுந்துள்ளது.



அத்தோடு தனுஷை பிரிந்து தன் மகள் தனியாக வாழ்வது ரஜினியை கவலை அடைய செய்துள்ளதாம். தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டும் சேரப் போகிறார்கள் என்று ரசிகர்கள் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தான் தனுஷ் இப்படி ஒரு நிபந்தனை விதித்திருப்பது குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.



Advertisement

Advertisement