துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித்தின் புதிய படத்தை யார் இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மே 1 ஆம் தேதி அவரின் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
மேலும், அந்த படத்துக்கு விடாமுயற்சி எனவும் தலைப்பு வைக்கப்பட்டது. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு புணேவில் தொடங்கவுள்ளதாகவும், அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது விடாமுயற்சி படத்தில் சஞ்சய்தத், அர்ஜூன் தாஸ், எனப் பல பிரபலங்களின் பெயர் பரிசீலனையில் உள்ளன.இந்நிலையில் அஜித் குமார் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உடன் துபையில் எடுத்து கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதனால் விடாமுயற்சி படத்தில் சஞ்சய் தத் அஜித்துடன் நடிக்க போகிறாரா என்று ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது.அத்தோடு ஷுட்டிங் எப்போது ஆரம்பமாகும் என்று கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!