• Sep 21 2024

ரவீந்தரோடு சேர்ந்து குழந்தை பெற்றுக்கொள்வாரா மஹாலக்ஷ்மி-அதற்கு அவர் என்ன கூறியுள்ளார் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் ‘நட்புன்னா என்ன தெரியுமா, முருகைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் ரவீந்தர்.  இவரை சினிமா தயாரிப்பளராக தெரிந்ததை விட பலருக்கும்  பிக் பாஸ் விமர்சகராக தான் அதிகம் தெரியும். அதுவும் வனிதா பங்கேற்ற பிக் பாஸ் சீசன் 4ல் தான் இவரது விமர்சனங்கள்  சமூகவலைத்தளங்களில் பெரும் பிரபலமானது.



தற்போது பல படங்களை தயாரித்தும் விநியோகம் செய்து வரும் இவர் சமீபத்தில் மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து இருப்பதாக புதிய ஷாக்கை கொடுத்துள்ளார்.இவர்களது திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும் சமூக வலைதளத்தில் திருமணத்தை அதே அளவு விமர்சனம் செய்தும் வருகிறார்கள். 


மேலும் இப்படி ஒரு நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் ரவீந்திரன்.திருமணத்திற்கு பிறகு  ரவீந்திரன் மற்றும் மஹாலக்ஷ்மி ஒரு சில பேட்டிகளை கொடுத்திருக்கிறார்கள். அந்த பேட்டியில் பேசிய ரவீந்திரன் எங்கள் திருமணத்திற்கு பின்னர் பலரும் மகாலட்சுமி இரண்டாம் திருமணம் செய்துவிட்டார் என்று தான் தலைப்புகளை போட்டு செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.


ஆனால், உண்மையில் எனக்கும் இது இரண்டாம் திருமணம் தான் என்று கூறியுள்ளார். ஆனால் என்னுடைய முதல் திருமண வாழ்க்கை குறித்து நான் அவ்வளவாக வெளியில் சொன்னது கிடையாது என்பதால் எனக்கு திருமணம் ஆனதே பலருக்கும் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.


மேலும் பல விசயங்களை பகிர்ந்த இருவரும் தமது காதல் எப்படிப்பட்டது என கூறினார்கள்.ஒரு வருடத்திற்கு மேல் தாம் கதாலித்ததாகவும் மஹாலக்ஷ்மியின் குழந்தையை தன் குழந்தை மாதிரி பார்த்துக்கொள்வதாகவும் ரவீந்தர் கூறினார்.அத்தோடு மஹாலக்ஷ்மியின் மகனுக்கு ரவீந்தரை ரொம்ப பிடிக்குமாம்.அவரின் சம்மதத்தை வாங்கி தான் திருமணம் செய்தார்களாம்.அவருக்கு தற்போது 6வயது தான் ஆகின்றதாம்.அப்பிடி இருந்தும் அவர் நல்ல முடிவுகளை எடுத்துள்ளார் என மஹாலக்ஷ்மி கூறியுள்ளார்.



அத்தோடு தானும் மஹாலக்ஷ்மியும் இணைந்து குழந்தை பெற்றுக்கொள்வோம்.அதில் உறுதியாக மஹாலக்ஷ்மி தான் உள்ளார்.நான் எவ்வளவு குண்டாக இருந்தாலும் இப்படியே இருப்பது தான் பிடிக்கும் என்று மஹாலக்ஷ்மி கூறுவார் என ரவீந்தர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement