• Sep 20 2024

பாகுபலி படம் போல பொன்னியின் செல்வன் திரைப்படம் இருக்குமா?- இயக்குநர் மணிரத்னம் கொடுத்த அப்டேட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப் படமாக உருவாகியுள்ளது தான் பொன்னியின் செல்வன்.இப்படம் பிரமாண்ட நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது.

இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஜெய்ராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.


இந்த படம் இந்த மாதம் 30ம் தேதி வெளியாக உள்ள நிலையில் நேற்று இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. அதில் பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து பேசிய மணிரத்னம் “செக்க சிவந்த வானம் படம் முடித்த பிறகு என்ன செய்ய ஆசை என லைகா சுபாஸ்கரன் என்னிடம் கேட்டார். அதற்கு நான் பொன்னியின் செல்வன் எடுக்கப்போகிறேன் என கூறினார். அவர் அதற்கு சம்மதித்தார்.

படம் பாகுபலி போல, பத்மாவதி போல இருக்குமா என அவர் கேட்டார். நான் அதற்கு கல்கி விரும்பியபடி படம் இருக்கும் என சொன்னேன்” என்று கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது எனலாம்.



Advertisement

Advertisement