விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6.இந்த நிகழ்ச்சியானது தற்பொழுது விறுவிறுப்பாகவும் ஓடிக் கொண்டிருக்கின்றது. கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி 21 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி 7வது வாரத்தை கடந்துள்ளது.
இந்த 21 போட்டியாளர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார்.எனினும் இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். இதன் பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, கடந்த வார இறுதியில் நிவாஷினி வெளியேற்றப்படுவதாக கமல் தெரிவித்தார்.
இதனிடையே, இந்த வாரத்துக்கான பிக்பாஸ் வீட்டு தலைவராக மைனா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அத்தோடு கால்பந்து போட்டியின் மூலம் தலைவர் தேர்ந்தெடுப்பு நடைபெற்றது. இதில் போட்டியிட்ட தனலட்சுமி இதுகுறித்து கோர்ட் டாஸ்க்கில் வழக்கு ஒன்றையும் தொடுத்திருந்தார். மேலும் இது ஒருபக்கம் இருக்க, குயின்சி - மணிகண்டா இடையேயான உரையாடல் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்தோடு பிக்பாஸ் வீட்டுக்குள் கார்டன் பகுதியில் குயின்சி, ஆயிஷா, மைனா மற்றும் மணிகண்டா ஆகியோர் பேசிக்கொண்டிருக்கின்றனர். எனினும் அப்போது, சிரித்தபடியே "போயிடுறேன் நான். அடுத்த வாரம் போய்டுவேன்" என்கிறார் மணிகண்டா. இதனைக்கேட்ட குயின்சி,"இதைச் சொல்லும்போது உனக்கே சிரிப்பு வரலையா? என் Team உனக்கு தான் வேலை பார்த்துட்டு இருக்கும்" என்கிறார் ஜாலியாக.
Listen News!