விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ராஜா ராணி சீசன் 2.கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மையப்படுத்தி ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் மூத்த மருமகளான சந்தியா போலீஸ் ஆவதற்காக ரெயினிங் பெற சென்று விட்டார்.
இது ஒரு புறம் இருக்க இரண்டாவது மற்றும் மூன்றாவது மருமகள்களான அர்ச்சனாவும் ஜெசியும் கூட அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தோடு மகன்களான சரவணனும் செந்திலும் வியாபாரிகள் சங்கத் தேர்தலுக்கு போட்டியிடுவதற்காக கடுமையாக போராடி வருகின்றனர்.
இதனால் குடும்பம் பிரிந்து விடுமோ என்ற ஏக்கத்தில் சிககாமி தவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் வாக்களிக்கும் நாள் வந்துவிட்டது. அதற்காக எல்லோரும் சென்று வாக்களித்து விடுகின்றனர். இறுதியாக செந்திலா அல்லது சரவணனா ஜெயிக்கப் போகின்றார் என எல்லோரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
இதில் யார் ஜெயித்தாலும் வீட்டில் எப்படியும் பூகம்பம் வெடிக்கும் என்ற கலக்கத்தில் சிவகாமி இருப்பதை இந்த ப்ரோமோவில் காணலாம்.
Listen News!