• Sep 20 2024

கதறி அழும் விசாலாட்சி... கௌதமிற்கு தெரிய வந்த உண்மை... குணசேகரனை போட்டுத் தள்ளுவாரா ஜீவானந்தம்..? பரபரப்பான 'Ethirneechal' Promo..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

சன்டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலின் கதைப்படி தற்போது ஆதி குணசேகரன் வீட்டைவிட்டு வெளியேறி விட்டார். இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரேமோ வெளியாகியுள்ளது. 


அதில் விசாலாட்சி அழுத வண்ணம் "நீங்கள் ஆச்சு, அந்தக் கிழவி ஆச்சு, என்னை ஆழ விடுங்க" எனக் கூறி அழுகின்றார். அதற்கு நந்தினி "நீங்க என்ன தப்புப் பண்ணினீங்க" எனக் கேட்கின்றார்.


மறுபுறம் கௌதம் ஒருவரிடம் "ஜீவானந்தத்தின் மனைவியை கொண்டவனைப் பற்றி தகவல் ஏதாவது கிடைச்சுதா" எனக் கேட்கின்றார். அதற்கு அவரும் ஆதி குணசேகரன் தான் கொலை செய்ததாக கூறுகின்றார்.


இதனைத் தொடர்ந்து ஜீவானந்தமும் ஈஸ்வரியும் ஒரு இடத்தில் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அப்போது ஈஸ்வரி "எனக்கு நிறைய சங்கடம் இருக்கு வேற வழி தெரியல" என்கிறார்.


பதிலுக்கு ஜீவானந்தம் "ஆனால்.." என இழுக்க, ஈஸ்வரி ஜீவானந்தத்தின் மகள் பற்றி ஏதோ கூறுகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்துள்ளது. 


Advertisement

Advertisement