இளைஞர், யுவதிகள் ரசிக்கும் ஒரு தொடராக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது 'காற்றுக்கென்ன வேலி' சீரியல். இந்த சீரியல் முழுக்க முழுக்க கல்லூரியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக காதல், குடும்பம், எமோஷன் இடையில் கொஞ்சம் சமூக பிரச்சனை என எல்லாம் கலந்த கலவையாக இந்த சீரியல் கதை அமைந்துள்ளது. அத்தோடு இந்த சீரியலில் அடிக்கடி பரபரப்பு திருப்பங்களும் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் வெண்ணிலாவின் அம்மா, அப்பா கோவிலுக்கு வந்திருக்கின்றனர். அந்த சமயத்தில் அங்கிருந்த முதியவர் "உன் பொண்ணுக்கு கல்யாணம் நடக்கப் போகிறது, உன் பொண்ணு வாழ்க்கை இனி நல்லா இருக்கும், அவ நினைச்ச எல்லாமே நிறைவேறும்" எனக் கூறுகின்றனர். அதனைக் கேட்டதும் அவர்கள் உடனே ஆச்சர்யமடைகின்றனர்.
அதுமட்டுமல்லாது "உன் பொண்ணுக்கு கல்யாணம் முடிந்த கையுடன் அம்மனுக்கு பட்டுப் புடைவை வாங்கி சாத்து" எனவும் கூறுகின்றார் அந்த முதியவர். பின்னர் வீட்டிற்கு சென்ற வெண்ணிலாவின் அம்மா வெண்ணிலாவிடம் "உனக்கு கல்யாணம் ஆகப்போகிறது என்று அந்த ஆள் திடீர் என்று வந்து சொல்றார் வெண்ணிலா" எனக் கூறுகின்றார். அதனைக் கேட்டதும் வெண்ணிலாவும் அதிர்ச்சி அடைகின்றார்.
இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இனி என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!