சீரியல் நடிகையான பாவனி விஜய்டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றியதன் மூலம் பிரபல்யமானவர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது கணவர் இறப்பு குறித்து வெளிப்படையாகப் பேசி அனைவரையும் கவர்ந்தவர்.
மேலும் இந்த நிகழ்ச்சியிலேயே வைல்ட் கார்டு என்ட்ரி போட்டியாளராக இறங்கியவர் தான் நடன இயக்குநர் அமீர்.இவர் இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே பாவனியிடம் விளையாட்டாக தனனுடைய காதலை சொல்ல தொடங்கினார்.
பின்னர் BB Jodigal நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் அமீர் மற்றும் பாவனி இருவரும் டான்ஸ் பார்ட்னராக இணைந்து ஆடி டைட்டில் வின்னர் ஆகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
இது குறித்து பகிர்ந்தது மட்டுமின்றி, அமீருடன் வாழ்க்கையை தொடங்குவது குறித்தும் பாவனி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
அதில், “நீங்கள் மிகச் சிறந்த மனிதர். மாஸ்டர். டான்ஸ் ஆடும் போது மிகவும் உறுதுணையானவர். நல்ல நண்பர் . எனவே நம்முடைய வாழ்க்கை பயணத்தை சேர்ந்து தொடங்கலாம். என்னுடைய வாழ்க்கையில் மிகச் சிறந்த இணையராக இருங்கள். அந்த நாளுக்காக நான் காத்திருக்கிறேன். நீங்கள் எனக்காக எப்போதும் இருப்பீர்களா.? எப்போதும் ஐ லவ் யூ” என்றும் தெரிவித்திருந்தார்
இதனைத் தொடர்ந்து பிரபல சேனல் ஒன்றின் நிகழ்ச்சியில் அமீர் மற்றும் பாவனி கலந்து கொண்டு பேசியுள்ளனர். அதில் அமீரிடம் நேரில் ப்ரொபோஸ் பண்ணிய பாவனி, “அமீர் எனக்கு உன் கேரக்டர் பிடித்திருக்கிறது. உன் சிரிப்பு பிடித்திருக்கிறது. நீ அவ்வப்போது சிரித்துக்கொண்டே சாய்ந்தபடி பார்க்கும்போது அழகாய் இருப்பாய். நீ பண்ணும் பல கியூட்டான விஷயங்களை ரசித்திருக்கிறேன். நீ சாலையில் கையைப் பிடித்து அழைத்துச் செல்லும் பொழுது பிடிக்கும். நீ எப்போதும் என் மீது காட்டும் அக்கறை பிடிக்கும். ஒரு மாஸ்டராக நீங்கள் உங்கள் வேலையை அர்ப்பணிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும்போது நான் உங்களை சைட் அடித்திருக்கிறேன். சரி அவ்வளவுதான். ஐ லவ் யூ” என்று கூறினார்.
இதைக்கேட்ட அமீர், மிகவும் மகிழ்ச்சியானதுடன், “இப்படியெல்லாம் சொன்னதே இல்ல.. நன்றி” என்று கூறினார் பின்பு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய விஜே பக்கத்தில் பாவனி போனதும் அவரை கிஸ் பண்ணத் தான் போகிறார் என்று நினைத்து எங்கே போறீங்க கொண்டிடுவேன் என்று அமீர் கூறியதோடு அமீர் மற்றும் பாவனி ஆகியோர் இருவரும் பஃன்னுக்கு விஜேவை அடித்து விளையாடினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!