சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலில் அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வகையில் விறுவிறுப்புடன் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அந்தவகையில் இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கின்றது.
அதில் குணசேகரன் காரில் வரும்போது ஜான்சிராணி குறுக்காக நின்று அவரின் காரை மறிக்கின்றார். அதற்கு குணசேகரன் "நடு ரோட்டில் நின்று கொண்டு காரை மறிப்பீங்களா" எனக் கேட்கின்றார்.' அதற்கு ஜான்சிராணி "நடுரோட்டு என்பதால தான் சும்மா இருக்கின்றோம்" எனக்கூறி அசிங்கப்படுத்துகின்றார்.
பின்னர் மறுபுறம் ஜனனி வீட்டிற்கு வந்து கதவைத் தட்டுகின்றார். கதவைத் திறந்த குணசேகரன் "ஆதிரை கல்யாணம் நடக்கட்டும்னு பாக்கிறேன்" என்கிறார். அதற்கு ஜனனி "யாரோட நடக்கணும்னு பாக்கிறீங்க" எனக் கேட்கின்றார்.
மேலும் நந்தினியைப் பார்த்து "உன் புருசனைப் போய்ட்டு கூட்டிற்று வா" என குணசேகரன் கூறுகின்றார். அதற்கு நந்தினி முடியாது என்கிறார். குணசேகரன் நாளுக்கு நாள் எல்லாமே குறைஞ்சிட்டு போகுது எனக் கொந்தளிக்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.
Listen News!