• Sep 20 2024

'அவரோடு சேர்ந்து பணிபுரிந்தது மிகப்பெரிய தவறு'- பிரபல இயக்குநரை கதிகலங்க வைத்த கங்கனா ரனாவத்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் தான் கங்கனா ரனாவத். இவர் ஹிந்தியில் மட்டுமல்லாது தமிழிலும் சில திரைப்படங்களில நடித்திருக்கின்றார். இருப்பினும் ஏ. எல் விஜய் இயக்கத்தில் இறுதியாக வெளிவந்த லைவி திரைப்படத்தின் மூலம் தான் பிரபலமானார்.

இருப்பினும் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இது தவிர தனது சிறந்த நடிப்பினால் பல முறை தேசிய விருது பெற்ற முன்னணி நடிகையாகவும் வலம் வருகின்றார். லாக் அப் என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகின்றார்.

தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பதிவிட்டு கடுமையான விமர்சனங்களுக்குள்ளும் உள்ளாகி வருகின்றார்.

பாஜக மற்றும் இந்துத்வா அமைப்புகளின் தீவிர ஆதரவாளரான இவர் காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்வது வாடிக்கை. அதுபோலவே பாலிவூட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் அனைவர் குறித்தும் கடுமையான விமர்சனங்களை அவ்வப்போது வைத்து வருகிறார்.

இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு கங்கனாவை வைத்து சிம்ரன் என்ற படத்தை இயக்கிய பாலிவூட் இயக்குநர் ஹன்சால் மேத்தா தான் கங்கனாவோடு பணியாற்றியது மிகப்பெரிய தவறு எனக் கூறியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் “கங்கனா ஒரு சிறந்த நடிகர்.

ஆனால் அந்த திறமைக்கு ஒரு வரையறை உள்ளது. சிம்ரன் படத்தில் நாங்கள் எழுதியிருந்த பல காட்சிகளை அவர் எடுக்கவிடவில்லை. அவர் விரும்பிய காட்சிகளை மட்டுமே படமாக்க விரும்பினார். நீங்கள் நினைப்பதை எல்லாம் உங்கள் கதாபாத்திரங்கள் மேல் ஏற்றக்கூடாது. அவரோடு சேர்ந்து பணிபுரிந்தது மிகப்பெரிய தவறு” என்று கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement