• Sep 21 2024

அடடே.. தாமிர பரணி பட நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா..? அவரும் நடிகை தானாம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஷால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் தாமிரபரணி. இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் பானு. இப்படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த நடிகையாகவும் வலம் வந்தார்.

இந்த படத்தினை தொடர்ந்து அழகர் மலை, ரசிகர் மன்றம், சட்டப்படி குற்றம்,மூன்று பேர் மூன்று காதல், தேசிங்கு ராஜா உள்ளிட்ட இன்னும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.


இருப்பினும் இதனைத் தொடர்ந்து இவருக்கு நல்ல படவாய்ப்புகள் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தமிழில் சரியான வாய்ப்புகள் அமையாததால் மலையாள சினிமாவில் முக்தா ஜார்ஜ் என்ற பெயரில் நடித்து வருகிறார்.



இந்நிலையில் இவர் 2015ஆம் ஆண்டு ரிங்கு டோமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும், திருமணத்திற்கு பின்னர் இவரை சினிமா பக்கம் காண முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். நடிகை முக்தாவிற்கு ஃகியாரா ரங்கு டோமி என்ற ஒரு மகளும் உள்ளார். 


இந்நிலையில் தற்போது பானுவின் மகள் கண்மணி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். அவர் பத்தாம் வளைவு என்ற படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறார். இவருடைய மகளின் புகைப்படங்கள் வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement