இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. தயாரிப்பாளர் லலித் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், மாத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது.
பான் இந்தியத் திரைப்படமாக உருவாகி வரும் இப்படம் அக்டோபர் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு இப்படம் குறித்த அப்டேட்டுகளும் அடிக்கடி வெளியாகிய வண்ணமே இருக்கின்றன. மேலும் சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான 'நா ரெடி' பாடல் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது மட்டுமல்லாமல் சர்ச்சைகளையும் சந்தித்திருந்தது.
படம் வெளியாவதற்கு முன்பாகவே படத்தினுடைய கதை, மற்றும் கதாபத்திரங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்த வண்ணம் தான் இருக்கின்றன. இந்நிலையில் இப்படத்தினுடைய தயாரிப்பாளர் ஆகிய 7 ஸ்க்ரீன் லலித் குமார் தற்போது லியோ படம் குறித்த சூப்பரான விமர்சனம் ஒன்றினை முன்வைத்து இருக்கின்றார்.
அந்தவகையில் அவர், லியோ படம் ரொம்ப சூப்பரா வந்துருப்பதாகவும், படத்தின் இண்டர்வல் கண்டிப்பாக படம் பார்க்கும் அனைவருக்கும் Goosebumps moment-ஆக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாது இண்டர்வல் காட்சி மொத்தம் 8 நிமிடங்களாக மட்டுமே இருந்தாலும் கண்டிப்பாக அதை திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்" என தெரிவித்துள்ளார்.
இவர் முன்வைத்த இந்த விமர்சனமானது 'லியோ' படத்தின் மீதான எதிர்பார்ப்பை மென்மேலும் தூண்டியுள்ளது. ஆகவே அந்த இண்டர்வல் காட்சியில் அப்படி என்ன சர்ப்பிரைஸ் இருக்கு என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!