• Sep 21 2024

எழுத்தாளராக மாறிய நடிகை சமந்தா- யாசோதா படத்திலிருந்து வெளியாகிய புதிய அப்டேட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் இறுதியாக தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி இவருக்கு தனிப்பட்ட முறையில் சிறப்பான பெயரை பெற்றுத் தந்தது.

விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.தமிழைத் தவிர தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகின்றார். அந்த வகையில் தற்பொழுது இவரது நடிப்பில் யசோதா படம் என்னும் படம் உருவாகி வருகின்றது.

இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் சமந்தா எழுத்தாளராக நடித்துள்ளார்.த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டயலாக் போர்ஷன் தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது. பாடல் காட்சிகளின் சூட்டிங் விரையில் நடைபெறவுள்ளதாம்.

இந்தப் படத்தில் சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹரிஹரீஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தை ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலிங்கா கிருஷ்ண பிரசாத் தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Advertisement

Advertisement