• Sep 20 2024

யப்பா யேய், என்ன பாத்தா மனுஷன் மாதிரி தெரிலையா- வடிவேலுவின் வாயில் தண்ணீர் ஊற்றி விளையாடும் பிரபு தேவா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய காடி நடிகராக வலம் வருபவராக வடிவேலு இருக்கின்றார். இவர் பார்த்திபன், சத்யராஜ், விஜய் அஜித் ரஜினி என்று பல முன்கணி நடிகர்களின் திரைப்படங்களில் இணைந்த நடித்திருக்கின்றார்.சில காலம் சினிமாவை விட்ட விலகியிருந்த இவர் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் மூலம் ரி என்ட் ரி கொடுக்கவுள்ளார்.

இவரின் இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு பிரபு தேவா நடன இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.அந்த வகையில் வடிவேலு-பிரபுதேவா ஆகிய இருவரும் காதலன், ராசய்யா, மிஸ்டர் ரோமியோ, மனதை திருடிவிட்டாய் என்று பல படங்களில் ஒன்றாக இணைந்து பணி புரிந்துள்ளனர்.

பிரதேவா ஹீரோவாக நடித்த படங்களில் வடிவேலு காமெடி நடிகராக நடித்தார் என்பதைத் தாண்டி, பிரபுதேவா இயக்கிய படங்களிலும் வடிவேலுவை நடிக்க வைத்துள்ளார்.இந்த நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வடிவேலு பிரபு தேவா பற்றி கூறியுள்ளார்.

அதில் கூறியதாவது திரைக்கும் முன்னால் மட்டுமில்லாமல் ஸ்பாட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று வடிவேலுவின் வாயில் தண்ணீர் ஊற்றிவிடுவாராம். தனக்கு தோன்றிய சேட்டைகளை அவர் செய்யும்போது,"யப்பா யேய், என்ன பாத்தா மனுஷன் மாதிரி தெரிலையா" என்று வடிவேலு பாவமாக கேட்பாராம் என்று கூறியுள்ளார்.

அதே போல வடிவேலு மட்டும் சும்மா இருப்பாரா… பிரபுதேவா இயக்கும் படங்களில் கேமராமேன் ஷாட் ரெடி என்று சொல்லிவிட்டால், பிரபுதேவாவை உப்பு மூட்டை சுமந்து ஸ்பாட்டிற்கு செல்வாராம் வடிவேலு. வடிவேலுவின் சிறந்த பத்து ரசிகர்கள் என்று பட்டியலிட்டால், அதில் தான் இடம்பெற்று விடுவேன் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபுதேவா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து, இவர்கள் வெளியிட்ட "சிங் இன் த ரைன்" வீடியோ இணையத்தில் வைரலானது .ஏற்கனவே, சைதாப்பேட்டை, மோனாலிசா உள்ளிட்ட ஹிட் பாடல்களில் பிரபுதேவா நடனத்தில் வடிவேலு ஆடியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Advertisement

Advertisement