• Sep 21 2024

யாரடி நீ மோகினி சீரியல் நக்ஷத்திராவுக்கு நடந்த வளைகாப்பு- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஷு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி' சீரியல் மூலம் பிரபலமான நக்ஷத்ரா. தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான 'கிடாரி பூசாரி மகுடி' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். 


முதல் படத்திலேயே கிராமத்து வேடத்தை ஏற்று நடித்த நக்ஷத்ரா, அந்த படத்தின் கதாபாத்திரத்திற்கு பொருந்தி நடித்திருந்தாலும்... தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியலின் பக்கம் திரும்பினார்.திரைப்படங்களில் இவருக்கு கிடைக்காத வரவேற்பை, குறுகிய காலத்தில் சீரியல் பெற்றுத் தந்தது. மேலும் இவருக்கு என தனி ரசிகர் கூட்டமும் உருவானது. 


இந்நிலையில் கடந்த ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலரான விஷ்வா என்பவரை நக்ஷத்ரா மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். இதனை புகைப்படம் வெளியிட்டு தெரிவித்த இவர், திடீர் என ஏன், திருமணம் செய்து கொண்டேன் என்பதையும் பேட்டி ஒன்றின் மூலம் தெரிவித்திருந்தார்.

அதாவது தன்னுடைய இந்த அவசர திருமணத்திற்கு காரணம் தன்னுடைய தாத்தா தான் என்றும், அவருக்கு மிகவும் உடல் நிலை சரியில்லை. அவர் தன்னுடைய திருமணத்தை பார்க்க ஆசைப்பட்டதால் மிகவும் அவசர அவசரமாக இந்த திருமணம் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார், 


மேலும் திருமணம் ஆன ஒரே வாரத்தில், தன்னுடைய தாத்தா இறந்த தகவலையும் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார். திருமணம் ஆன பின்னரும் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'வள்ளி திருமணம்' என்கிற சீரியலில் நெகடிவ் ரோலில் நடித்து வந்தார்.


இந்த சீரியல், கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. இதை தொடர்ந்து கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் ஷு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி டான்ஸ் ஷோ ஒன்றில் தன்னுடைய கணவருடன் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில்  இவரின் குடும்பத்தை சேர்த்தவர்கள்... நக்ஷத்ராவுக்கு 5 மாத சீர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிலையில், மிகவும் எளிமையான முறையில் அந்த நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. தற்போது இது குறித்த வீடியோக்களை நக்ஷத்ரா, தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement