விஜய்டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2 இல் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் யாஷிகா ஆனந்த்.இவர் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்.
அதன்பிறகு இவர் ஜாம்பி, துருவங்கள் பதினாறு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.அத்தோடு கடந்த 2021ம் ஆண்டு விபத்தில் சிக்கியிருந்த யாஷிகா தற்பொழுது அதிலிருந்து குணமடைந்து மீண்டும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.
இவரது நடிப்பில் உருவாகிய கடமையைச் செய் என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் எஸ். ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது சேலையில் ரசிகர்களை தள்ளாட வைக்கும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!