'துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, நோட்டா' உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்,. அதுமட்டுமல்லாது பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தனது ரசிகர்கள் பட்டாளத்தை மென்மேலும் அதிகரித்துக் கொண்டார்.
இந்நிலையில் யாஷிகா 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது பள்ளித்தோழி வள்ளிசெட்டி பவனி (28) உள்ளிட்ட மூன்று நண்பர்களுடன் சேர்ந்து அவுட்டிங் சென்று விட்டு சென்னை திரும்பியபோது, அவர்கள் சென்ற கார் விபத்தில் சிக்கி, அவரது தோழி வள்ளி பவனிசெட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தமை நம் அனைவருக்கும் தெரியும்.
அதாவது காரை யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்த நிலையில், மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு என்ற இடத்தில் வந்தபோது கார் நிலை தடுமாறி சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி, நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மாமல்லபுரம் காவல் துறையினருக்கு அளித்த தகவலை அடுத்து, படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட 3 பேரும் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கு காரணம் யாஷிகா அதிவேகமாக காரை ஓட்டி வந்ததாகவும், அவரது தோழி பவானி வள்ளி செட்டி சீட் பெல்ட் அணியாததால், கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேர்ந்தபோது அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் யாஷிகாவின் வாக்குமூலத்தின் வாயிலாக தகவல்கள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து மாமல்லபுரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 25ஆம் தேதியான இன்று யாஷிகா ஆஜராகுமாறு நீதிபதி மேவிஸ் தீஸ் தீபி,ஆ சுந்தரவதனா உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் இன்று நடந்த விசாரணைக்குப் பிறகு மீண்டும் வரும் ஜூலை 27ஆம் தேதி ஆஜராகுமாறு யாஷிகாவுக்கு செஙகல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Listen News!