• Sep 20 2024

ஜீவானந்தம் யார்..? பாதிக்கப்பட்ட நபர் மூலம் ஜனனிக்கு கிடைத்த தகவல்... கதிரிடம் சவால் விட்ட குணசேகரன்... 'எதிர்நீச்சல்' நேற்றைய எபிசோட்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ரசிகர்களின் விறுவிறுப்பைத் தூண்டியவாறு அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் நேற்றைய எபிசோட்டில் என்ன நடந்துள்ளது என்பதை பார்ப்போம்.

அதில் ஐஸ்வரியாவின் பள்ளியில் குழந்தைகளுக்கு நடனம் சொல்லிக் கொடுக்கின்ற ஆசிரியர் தான் வரமுடியாது எனக் கூறியதால் ரேணுகா அவர்களுக்கு தான் கற்றுக் கொடுக்கிறேன் என கூறி சொல்லிக் கொடுக்கின்றார். அதற்கு பள்ளி ஆசிரியை இன்றைக்கே ஆரம்பிக்கலாம் என கூறுகிறார். இதனையடுத்து ரேணுகாவும் மிக அழகாக நடனம் ஆடிக் காட்டுகின்றார். 


மறுபுறம் ஜீவனந்தத்தால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவருக்காக பெண் போலீஸ் அதிகாரி, சக்தி மற்றும் ஜனனி ஆகியோர் காத்துகொண்டு இருக்கிறார்கள். அந்த நேரத்தில் அங்கு வந்த அவர் "நீங்கள் தான் குணசேகரன் பேமிலியா" என கேட்கிறார். பின்னர் எதிரில் இருப்பது போலீஸ் அதிகாரி என தெரிந்ததும் அலறி அடித்துக் கொண்டு கிளம்புகிறார்.

மேலும் "ஜீவனந்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் தான் நீங்கள் கூப்பிட்டதும் நான் உடனே வந்தேன். ஆனால் போலீசை வைத்து கொண்டே பேசுறீங்க. ஜீவானந்தத்திற்கு  தெரிந்தால் அவ்வளவு தான்" எனக் கூறுகின்றார். பின்பு ஜனனி அவரிடத்தில் "அவங்க அஃபிஷியலா வரவில்லை எங்களுடைய ப்ரெண்டா தான் வந்து இருக்காங்க" என கூறிப் புரிய வைக்கின்றார். 


பின்பு "பணத்தையும் பறிகொடுத்து உயிரையும் கொடுக்க முடியாது" எனக் கூறுகின்றார் பின்பு அந்த நபர். "அவங்களுக்கும் இந்த விஷயத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இப்ப தான் நாங்க அவங்கள பாக்குறோம். நான் குணசேகரன் தம்பி இது என்னுடைய மனைவி" என்கிறார் சக்தி. 

பதிலுக்கு ஜனனியும் "நிச்சயமா நாங்க போலீஸுக்கு போக மாட்டோம். ஜீவானந்தம் பற்றிய பேக் கிரவுண்ட் என்ன என்பது தெரிந்தால் தான் எங்களால் அடுத்து என்ன செய்வது என பிளான் செய்ய முடியும்" என கேட்கிறார். அதற்கு அந்த நபர் "அவனை பற்றி எனக்கு இதுவரைக்கும் எதுவும் தெரியாது.  கொடைக்கானல் அருகில் இருக்கும் கவுஞ்சி தான் என்னுடைய சொந்த ஊர். என்னுடைய இடத்தை பிடுங்கி அந்த ஊரில் இருக்கும் மக்களுக்கு கொடுத்துவிட்டான். அவனை பற்றி கேட்டலே என்னை அடிக்க வருகிறார்கள் அந்த ஊர் மக்கள்" என தனக்கு நடந்த அநீதி பற்றி அந்த நபர் கூறுகின்றார்.


இதனையடுத்து ஜனனி "இந்த தகவல் போதும் நான் பார்த்து கொள்கிறேன்" என சொல்ல "நீங்க என்ன வேணாலும் பண்ணிக்கோங்க. ஆனா தயவு செய்து என்னை மட்டும் மாட்டி விட்டுராதீங்க. நீங்களும் உங்க குடும்பத்தில் இருக்கிறவங்களும் ஜாக்கிரதையா இருங்க" என அவர்களுக்கு அட்வைஸ் பண்ணிவிட்டு அந்த நபர் செல்கின்றார். 

மறுபுறம் சென்னை சென்ற குணசேகரனும் கதிரும் தங்கும் இடத்திற்கு சென்று அந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்க்கு போன் செய்கிறார். "இப்போ கிளம்பி வரீங்களா? என கேட்க அவர் இப்போது வேண்டாம் நாளை காலை திருவான்மியூர் பீச்சில் சந்திக்கலாம்" எனப் பதிலளிக்கின்றார். 

பின்னர் கதிர் குணசேகரனிடம் "நீங்க ஏன் அவரை இவ்வளவு நம்புறீங்க ?" என கேட்கிறான். பதிலுக்கு குணசேகரன் "அந்த ஆள் பயங்கரமான ஆள். சரியான ரவுடி. ஜீவானந்தம் போன்ற ஆட்களுக்கு முடிவு கட்ட இவன மாதிரி ஒரு கிறுக்கு பய தான் சரியான ஆள். அதனால் தான் இவனை குறி வைத்து வந்திருக்கிறேன். ஒரு வாரமா நம்மள புலம்ப விட்டுட்டான் இல்ல. அவனை சும்மா விட கூடாது " என குணசேகரன் கோபத்தில் கத்துகின்றார். 


பதிலுக்கு "அப்பத்தாவுக்கும் இந்த ஆளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கும். வேற வழியில உறவா இருக்குமா? " என கதிர் கேட்க, "அவன் என்ன உறவா வேணாலும் இருக்கட்டும் அவனை முடிக்க வேண்டும் அப்போ தான் நம்மால் மதுரையில் நடமாட முடியும்" எனக் கூறுகின்றார் குணசேகரன். அதுமட்டுமல்லாது "நாளே நாட்களில் உனக்கு ஒரு முடிவு காட்டுறேன் ஜீவானந்தம்" எனவும் ஜீவானந்தத்திற்கு சவால் விடுகின்றார் குணசேகரன். 

இவ்வாறாக இந்த எபிசோட் அமைந்துள்ளது.

Advertisement

Advertisement