• Sep 20 2024

மாமியார் மாதிரி தானே கொடுமைப்படுத்திறீங்க- தனத்தை மோசமாக திட்டிய ஐஸ்வர்யா- அடிக்க கை ஓங்கிய முல்லை- கோபத்தில் கண்ணன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ஐஸ்வர்யா கண்ணனை கல்யாண மண்டபத்தில் மூர்த்தி அடித்ததை வைத்து பேசிக் கொண்டிருக்கின்றார். அத்தோடு தனத்தை பார்த்து நீங்களும் இந்த வீட்டுக்கு வாழ வந்தவங்க தானே மாமியார் மாதிரி நடத்திறீங்க. நீங்க சொல்லுறதை மட்டும் தான் நாங்க செய்யனுமா? நீங்க சொல்லுறதை தான் சமைக்கணும்.


நீங்க சொல்லுறதை தான் சாப்பிடணும் நீங்க வாங்கித் தாற துணியைத் தான் போடணும் என்று நிறைய அடுக்கிக் கொண்டே போகின்றார். அதனால் ஆத்திரமடைந்த முல்லை. உனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சா. உங்க சித்தி மாதிரியே பண்ணிடடு இருக்கிற என்று சொல்லவும் ஐஸ்வர்யா அடங்கியதாக இல்லை.

அத்தோடு இந்த வீட்டில சந்தோஷமாக இல்லை கஷ்டப்பட்டுத் தான் இருக்கிறோம் என்று சொல்ல கோபமடைந்த மூர்த்தி கஷ்டப்பட்டு எல்லாம் இங்க யாரும் இருக்க வேண்டாம் என்கிறார். ஆனால் யார் பேச்சையும் கேட்காமல் ஐஸ்வர்யா பாக்கை எடுத்துக் கொண்டு கிளம்புகின்றார்.அப்போது கதிர் கண்ணனிற்கு அறிவுரை சொல்ல அப்போதும் ஐஸ்வர்யா திரும்ப திரும்ப பேசுகின்றார்.


அத்தோடு கண்ணனைப் பார்த்து உனக்கு நல்லது நடக்கணும் என்று நினைக்கிற நான் வேணுமா, இல்லை இவங்க தான் வேணுமா என்று நீயே முடிவு பண்ணிக்கோ என்று ஐஸ்வர்யா சொல்ல கண்ணன் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார்.இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement