• Sep 20 2024

என்னை பிடித்தது போல் நடிக்கலாம் தானே- ரச்சிதாவிடம் மண்டியிட்டு ஃபீல் பண்ணிய ராபர்ட் மாஸ்டர்

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.அந்த வகையில் கடந்த வாரம் கண்ணா லட்டு திண்ண ஆசையா?’, ‘அடை தேனடை’ என இருவகை கம்பெனிகளாக பிரிந்து பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் இனிப்பு கடைகளை வைத்தனர். 

இதன் போது பல சண்டைகளும் மோதல்களும் நடந்தன. இருப்பினும் போட்டியாளர்கள் டாஸ்கினை சிறப்பாக செய்து முடித்தனர். அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் இந்த வீட்டிலிருந்து மகேஷ்வரி வெளியேறினார்.இதனால் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது.


இந்நிலையில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதாவிடம் பேசியுள்ள விசயம் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ராபர்ட் மாஸ்டரிடம் நேரடியாகவே பேசியிருந்த ரச்சிதா "ஏன் இப்படி அப்நார்மலாக நடந்து கொள்கிறீர்கள்?. நார்மலாக இருங்களேன். நீங்க என்ன எவ்வளவு கலாய்க்குறீங்க, பதிலுக்கு நான் ஒன்னும் சொல்ல கூடாதா?. ஏன் இப்படி இருக்கீங்க. நீங்க பண்றது குழந்தைத்தனமா இருக்கு. உங்களுக்கு அது தெரியுதா?. எதோ எதிரி மாதிரி Behave பண்றீங்க. எதிர்ல் இருக்கிறவங்களுக்கு எப்படி இருக்கும்ன்னு தெரியுமா?. நீங்க நார்மலா இருங்க" என அட்வைஸ் செய்திருந்தார்.


இந்நிலையில் ரச்சிதாவிடம் சென்று பேசும் ராபர்ட் , “நீங்கள் நடித்து தானே ஆக வேண்டும் என்கிறீர்கள்.. அப்படி என்றால் என்னை பிடித்தது போல் நடிக்க வேண்டியதுதானே..?” என்று கேட்கிறார். அதற்கு ரச்சிதாவோ, “அப்படி எல்லாம் இருக்க முடியாது. இது பிக் பாஸ் வீடு. அப்படி நடித்தால் தப்பாகிவிடும், அது எப்படி ஒருவரிடம் அப்படி நடிப்பது? நான் நடிப்பதற்காக இங்கு இல்லை. எது எப்படி இருக்கிறதோ அதை அப்படியே காட்ட வேண்டும், அவ்வளவுதான்!” என்று பேசியுள்ளார்.

Advertisement

Advertisement