• Sep 20 2024

தியேட்டரை விட்டு அழாம வெளிய வர முடியாது; வாத்தி திரைப்படத்தில் படக்குழு போட்ட சீக்ரெட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் வாத்தி.இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் நாகவம்சி தயாரித்துள்ளார். தெலுங்கு பிரபலங்கள் இப்படத்தில் நடிப்பதால் இப்படம் தெலுங்கு சாயலில் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

பொதுவாகவே தெலுங்கு இயக்குநர்கள் தங்கள் படங்களில் சென்டிமென்ட் காட்சிகளை வாரி இறைத்திருப்பார்கள். அதுபோலத்தான் தற்பொழுது வெளியாக உள்ள வாத்தி திரைப்படத்திலும் குடும்ப ஆடியன்ஸை கவர்வதற்காக நான்கு இடத்தில் சென்டிமென்ட் காட்சிகளை வைத்துள்ளனர். இதனால் ஆடியன்ஸ் யாரும் அழாமல் தியேட்டரை விட்டு வெளியே வர முடியாது என்பது போல் அந்த நான்கு சீக்ரெட் காட்சிகளை வைத்துள்ளதாக  பெருமையாக பேசி வருகின்றனர்.


மேலும் வாத்தி திரைப்படம் வருகிற 17ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் தனுஷ் உடன் சம்யுக்தா மேனன், சாய்குமார், தனிகெல்லா பரணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.இப்படம் தமிழ் ,தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகவுள்ளது.


சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து வாரிசு படத்தைப் போலவே வாத்தி படமும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக தான் இருக்கும் என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். மேலும் நான்கு சென்டிமென்ட் காட்சிகள் உள்ளதால் குடும்ப ஆடியன்ஸ் மட்டுமல்லாமல் எல்லா ஆடியன்ஸ்களையும் கவரும் விதத்தில் உருவாகியுள்ளது. இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து விடும் என்று பட குழுவானது ஆர்ப்பரித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement