தமிழ் அன்றும் இன்றும் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் நடிகர் தான் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியாகிய ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இப்படத்தில் மும்மொழி ஸ்டார்கள் நடித்தது மிகப்பெரிய பக்கபலமாகி இருக்கின்றது.
மேலும் படம் வெளியாக முதலே ரஜினிகாந்த் இமயமலைக்குச் சென்றுள்ளதோடு அங்குள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்து வந்தார். தற்பொழுது தன் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னைக்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் ரஜினியின் பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது.அதில் அந்தரங்க விஷயம் குறித்து ஓபனாகப் பேசியுள்ளார். அந்தரங்கம் என்பது பரமசுகமான ஒன்று. அதுதான் ஆனந்தம். அதைவிட பெரிய ஆனந்தம் எதுவும் இல்லை. வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு இது தவறான விஷயம் இல்லை. பெண் இல்லாமல் தூங்க முடியாது நிலை ஒரு காலத்தில் இருந்தது. இப்போது அது குறைந்துவிட்டதாக கூறி இருந்தார்.
இதனால் ரசிகர்கள் தலைவர் ஓபனா பேசலாம். அதுக்குனு இப்படியா? ஒருகாலத்தில் ரஜினிகாந்த் ரொம்பவே குறும்பு செய்பவராக இருந்தார். அப்போதைய காலத்தில் அவர் இப்படி பேட்டி கொடுத்து இருக்கலாம். ஆனால் ஆன்மீகத்தில் மாறியவுடன் தற்பொழுது தான் பேசும் விஷயங்களில் அதிக கவனம் எடுத்துக்கொண்டு பேசுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!