பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது பிக் பாஸ் வீட்டில் Freeze டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் மீதமுள்ள 9 போட்டியாளர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
அந்த வகையில் விக்ரமனின் பெற்றோர்கள் வந்த போது போட்டியாளர்களிடம் பேசிய விஷயமும் பெரிய அளவில் கவனம் பெற்றிருந்தது. அனைத்து போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு தனித்துவம் இருப்பதாக விக்ரமனின் தந்தை குறிப்பிட, ஏடிகேவின் உடல்நலம் குறித்து கேட்டு தெரிந்து கொண்டார் விக்ரமனின் தாயார். இதனைத் தொடர்ந்து, விக்ரமன் குறித்து பேசிய அவரது தந்தை, "அவருகிட்ட (விக்ரமன்) இருந்து நான் நிறைய கத்துக்கணும்ங்குறது தான் உண்மை" என கூறியதுடன் ஒரு பார்வையாளராக அவரை பார்ப்பதாகவும் கூறினார்.
இதற்கடுத்து, விக்ரமன் திருமணம் குறித்த பேச்சு எழ, வெளிய வந்ததும் திருமணமா என்றும் மணிகண்டா கேட்கின்றார். அப்போது பேசும் விக்ரமனின் தாயார், "நீங்க எல்லாம் எடுத்து சொல்லுங்க. சம்மதிக்க வெச்சுருங்க" என்றும் கூறுகிறார். "பொண்ணோடயே வந்துருவாரு பாருங்க" என்று ஷிவின் ஜாலியாக சொல்ல, முதல் ஆளாக திருமணத்திற்கு வந்து விடுவேன் என ஏடிகே கூறியபடி, மொய் மட்டும் எதிர்பார்க்காதீர்கள் என்றும் தெரிவிக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, ஷிவினிடம் பேசும் விக்ரமனின் தந்தை, "நீ ஒண்ணும் கவலைப்படாத. நாங்க எல்லோரும் இருக்கிறோம்.கேம் முடிஞ்சதுக்கு அப்புறம் வீட்டுக்கு எல்லாம் வா. உன்னோட Guts ரொம்ப பயங்கரமா இருந்தா பெரிய அளவுக்கு நீ வெற்றி அடைவே" என தெரிவிக்கிறார்.பின் ஷிவினிடம் ஜாலியாக பேசும் விக்ரமன், "ஷிவினு, பெரிய ஆளா வருவியாம்." என்றும் குறிப்பிடுகிறார்.
Listen News!