சிம்பு தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் 'பத்து தல'. இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையிலுள்ள நேரு ஸ்டேடியத்தில் மிகவும் பிரமாண்டமாக நேற்று இடம்பெற்றது.
இதில் பேசிய சிம்பு... உங்களுக்கு ஒரு சர்ப்பிரைஸ் வச்சிருக்கன் என கூறி லூசுப்பெண்ணே என்ற பாடலில் வரும் தனிமையை தேடுதே இதயமும் ஓடுதே என்ற லைனை பாடி ரசிகர்களை உற்ச்சாகமூட்டினார்.
மேலும் எல்லோரும் சந்தோசமாக வீட்டுக்கு போய்ட்டு வாங்க உங்க எல்லோருக்கும் சாப்பாடு ரெடி பண்ணி வச்சிருக்கோம் சாப்பிட்டு போங்க அவதானமாக போங்க.
மார்ச் 30-ம் திகதி உங்கட சந்தோசத்தை பார்க்க நான் வாறேன் எந்த தியட்டர் என்று சொல்ல மாட்டேன் ஏதோ ஒரு தியேட்டருக்கு வருவேன், என்னை கூட்டிக்கொண்டுவந்து இங்கு விட்டுட்டிங்க நீங்க சந்தோசமாக இருங்கள் மிச்சத்தை நான் பார்க்கிறேன்.
நான் தற்போது மீண்டும் வந்திட்டேன் எனக்காக நீங்க சமூக வலைத்தளங்களில் தலைவன் வந்திட்டான் அப்பிடி இப்படியென்று எதுவும் போஸ்ட் போட தேவையில்லை நீங்க ஜாலியாக இருங்கள், நான் என்ன செய்யிறேன் என்று மட்டும் பாருங்கள் இனி உங்களை தலைகுனிய விடவே மாட்டேன்.
என்னை சிறுவயதில் இருந்து ஆதரித்து வரும் தமிழ் மக்களுக்கும் ஒன்றும் சொல்கிறேன் தமிழ் சினிமா பெருமைப்படுகிற மாதிரி இனி நடந்துகொள்வேன்.
அதேபோல் ரசிகர்களுக்கு சொல்வது ஒன்றே ஒன்றுதான் யாருக்காகவும் உங்களின் தனித்தன்மையை விட்டுக்கொடுக்காதீர்கள் நீங்கள் நீங்களாக இருங்கள் என்றார்.
Listen News!