• Sep 21 2024

உங்க அப்பா கோபியை ரெண்டு சாத்து சாத்த வேண்டியது தானே.- எழிலுக்கு நடிகர் சசிகுமார் கொடுத்த அட்வைஸ்ட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் எதிர்பார்த்ததை விட வித்தியாசமான திருப்படங்களுடன் ஒளிபரப்பாகி வருகின்றது. கோபி செய்த துரோகம் தெரிந்ததால் பாக்கியா விவாகரத்துக் கொடுத்து விட்டார்.

இதேபோல் கோபியின் காதலியான ராதிகாவும் தன்னுடைய நெருங்கிய தோழியான பாக்கியலட்சுமிக்கே, தான் துரோகம் செய்தது போலான நிலையை உண்டாக்கிய கோபி மீது கோபமாக இருக்கிறார். ஆனாலும், ‘பாக்கியா வீட்டை விட்டு சென்று விட்டதால் அவளை மீண்டும் வீட்டுக்கு அழைக்கப் போவதில்லை’ என்று கோபி பிடிவாதமாக இருக்கிறார்.

இந்த சீரியலின் பிரபலங்கள் கடந்த வாரம் ராஜூ வூட்ல பார்ட்டி என்னும் நிகழ்ச்சியில் பங்குபற்றி இருந்தனர். அதில் கலந்து கொண்ட விஜே விஷால், ஒருமுறை நடிகர் மற்றும் இயக்குநர் சசிகுமார் பங்குபெற்ற ஒரு ஷூட்டிங் ஸ்பாட்க்கு அருகில்தான், தாங்கள் இருக்கும் படப்பிடிப்பும் நடந்ததாகவும், அப்போது அவரை சந்தித்தபோது அவர் எழில் என்று அழைத்ததாகவும் குறிப்பிட்டு சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அதில், “சசிகுமார் சார்.. என்னை எழில் என்று சொல்லி அழைத்த உடனே எனக்கு.. சார் கேரக்டர் பெயர் எல்லாம் சொல்லி அழைக்கிறீர்கள்.. என்னை தெரிகிறதா என்று கேட்டேன்.. அதற்கு அவர்.. வீட்டில் அனைவரும் பாக்கியலட்சுமி சீரியல் பார்க்கின்றனர்.. அதனால் தானும் பார்ப்பதாக கூறினார். மேலும் உங்க அப்பா கோபியை ரெண்டு சாத்து சாத்த வேண்டியதானே..? என்று கேட்டார்..

நாம் செய்யக்கூடிய சிறிய விஷயங்களை இப்படி பெரிய நடிகர்கள், இயக்குநர்கள் கவனிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியாக இருந்தது” என விஜே விஷால் தெரிவித்தார்.இதைக் கேட்ட ராஜூ, “இந்தியில் அனுராக் காஷ்யப் உள்ளிட்டோரெல்லாம் சிலாகிக்கும் ஒரு இயக்குநர் சசிகுமார், அவர் இப்படி நம் சீரியலை பார்ப்பதும் அதுகுறித்து கருத்து சொல்வதும் வியக்கத்தக்கதாக இருக்கிறது.. பெரிய விஷயம் கிரேட்.” என்று குறிப்பிட்டார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement