சீரியல் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு இருக்கும். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் சுசித்ரா. கன்னட நடிகையான இவர் தமிழில் நடிக்கும் முதல் சிரியல் இதுவாகும்.
இதில் அவர் பாக்கியலட்சுமி என்கிற லீட் ரோலில் நடித்து வருகிறார்.கடந்த சில மாதங்களாக இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பு குறையாமல் சென்று கொண்டிருப்பதனால் இதன் டிஆர்பி-யில் எகிறியபடி உள்ளது. டிஆர்பி-யில் டாப் 3 பட்டியலில் பாக்கியலட்சுமி சீரியல் இடம்பெற்று உள்ளது.
இதில் பாக்கியலட்சுமியாக நடிக்கும் சுசித்ராவின் நடிப்புக்கு மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.இது தவிர கன்னட சினிமாவிலும் நடித்து வருகின்றார். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தன்னடைய புகைப்படங்களை பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்பொழுது மாடர்ன் உடையில் புகைப்படம் வெளியிட்டு ஓர் பதிவினைப் போட்டுள்ளார். அதில் நன்றி, "எங்கள் வெகுமதி என்பது பொருள் அடிப்படையில் அளவிடப்பட வேண்டியதல்ல, ஆனால் மற்றவர்கள் அவர்கள் விரும்பிய இலக்கை அடைய எப்படி உதவ முடியும் என்பதில் தான்"என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Listen News!