• Sep 20 2024

பெரிய தொகைக்கு விற்கப்பட்டு இப்போதே லாபம் பார்த்த பொன்னியின் செல்வன், கேட்டால் வாயடைத்துப் போவீர்கள்

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க உருவாகியுள்ள பிரம்மாண்ட வரலாற்று திரைப்படம் பொன்னியின் செல்வன்.

இப்படத்தின் முதல் பாகமான PS-1 வரும் செப்டம்பர் 30-ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.மேலும் சமீபத்தில் கூட இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்தது. இதில் ரஜினி மற்றும் கமல் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இப்படத்தின் வியாபரங்கள் பெரியளவில் நடந்து வருகிறது.

அதன்படி இப்படத்தின் இசை உரிமம் மட்டும் ரூ. 16 கோடிக்கு விற்கப்பட்டு இருக்கிறதாம். இப்படத்தின் இரண்டு பாகங்களின் டிஜிட்டல் உரிமம் மட்டும் ரூ. 100 கோடிக்கு விற்கப்பட்டு இருக்கிறதாம். இதனால் இப்போதே பொன்னியின் செல்வன் பலரும் லாபமாக அமைந்துள்ளதாம்.   

Advertisement

Advertisement