• Sep 20 2024

கியாரா அத்வானியுடன் மீண்டும் ஒன்று சேர்ந்த இளம் நடிகர்-இது தான் விசயமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகைகளில் கியாரா அத்வானியும் ஒருவர்.இவர் பாலிவுட் நடிகரான சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து வந்தார்.

இந்நிலையில் அண்மையில் அவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு, ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளாமல் இருந்தார்கள். இருப்பினும் இது பிரேக்கப் இல்லை என்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் கூறினார்கள்.

மேலும் கார்த்திக் ஆர்யனுடன் சேர்ந்து தான் நடித்த பூல் புலய்யா 2 படத்தின் சிறப்பு திரையிடலுக்கு வருமாறு சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு போன் செய்து பேசியிருக்கிறார் கியாரா அத்வானி. அந்த அழைப்புக்கு பின்னர் எல்லாமே மாறிவிட்டது.

கியாராவின் அழைப்பை ஏற்று வந்த சித்தார்த் அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாராம். இனியும் நாம் பிரிந்திருக்க வேண்டாம் என்றார்களாம். மேலும் இது குறித்து அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தாவது, சித்தும், கியாராவும் மீண்டும் சேர்ந்துவிட்டார்கள் என்றார்.

அந்த நபர் மேலும் கூறியதாவது, சித்தார்த், கியாராவால் பிரிந்திருக்க முடியவில்லை. பிரிந்தது தவறு என்பதை உணர்ந்துவிட்டார்கள். இனியும் காதல் வேண்டாம் என்று கூறியது தவறு என்பதை புரிந்து கொண்டார்கள். கியாராவின் போன் அழைப்பால் தான் இந்த மாற்றம் என்றார்.

https://www.youtube.com/embed/ufbPrihrMW0

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement