கடந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீடு, அரண்மனையாகவும், அருங்காட்சியகமாகவும் மாறியது. அரண்மனையில் இருப்பது போலவே, பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ராஜா, ராணி, படைத்தளபதி, மந்திரி, என மாறி போட்டி போட்டு கொண்டு இருந்தனர்.
தங்களுடைய பர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தியது ஒரு புறம் இருந்தாலும் மற்றொரு புறம், பிரச்சனைகளும் பற்றி கொண்டு எரிந்தது.குறிப்பாக அசீம் மற்றும் ஏடிகே ஆகியோருக்கிடையிலான மோதல் ஒருவேளை கைலப்பாக மாறிவிடுமோ என்ற ரசிகர்களிடம் காணப்பட்டது.
இந்த நிலையில் இப்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் விக்ரமன் அசீம் தன்னிடம் எச்சி துப்பித் தருகின்றேன் சாப்பிடுகின்றீர்களா எனக் கேட்டது குறித்து விளக்கம் கொடுக்கிறார். இதற்கு கமல்ஹாசன் உங்களுடைய குணம் தான் உங்களுடைய தரம் என்ன என்று காட்டிவிடும் என்று கூறுகின்றார். இதனால் அசீம் அதிர்ச்சியில் உறைந்ததும் குறிப்பிடத்தக்கது.
Listen News!