தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த இவர் தமிழில் சுல்தான் என்னும் படத்தின் மூலம் அறிமுகமாகினார். இதனை அடுத்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்தருந்தார்.
இப்படம் திரையரங்கங்களில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கின்றது.நடிகை ராஷ்மிகா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் மிகவும் மனமுடைந்து பேசியுள்ளார்.இதில் ' சில நேரங்களில் என உடலால் மக்கள் மத்தியில் விமர்சனங்களுக்கு ஆளாகிறேன்.
நான் ஒர்கவுட் செய்யாமல் குண்டாக இருந்தாலும் தவறு, ஒர்கவுட் செய்து ஒல்லியாக ஆனாலும் தவறு. நான் ஓவராக பேசினாலும் கிரிஞ் என்று கூறுகிறார்கள். பேசவில்லை என்றால் இந்த பொண்ணுக்கு அதிக திமிரு இருக்கிறது என்று கூறுகிறார்கள்.நான் என்னதான் செய்வது, சினிமாவை விட்டு வெளியேறிவிடவா? இல்லை வேண்டாமா? என்னிடம் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால், என்னிடம் அதை தெளிவாக கூறிவிடுங்கள்.
என்ன தவறான முறையில் நினைக்காதீர்கள். உங்களுடைய வார்த்தைகள் மனரீதியாக துன்புறுத்துகிறது ' என்று கூறியுள்ளார்.இருந்தாலும் இவருக்கென்று ஏராளமான இளைஞர்கள் ரசிகர்களாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!