சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் 2023 தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இப்படத்தைத் தொடர்ந்து மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் விஷ்ணு விஷால்,மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.அத்தோடு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளார். லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
இது தவிர தலைவர் 171 என்ற அந்தப் படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கலாம் என சொல்லப்பட்டது. சிபி சக்கரவர்த்தியும் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசியிருந்தார். ஆனால், சிபி சக்கரவர்த்தியின் கதையில் ரஜினிக்கு திருப்தி இல்லை என்பதால் அவருக்குப் பதிலாக பிரதீப் ரங்கநாதனுக்கு அந்த வாய்ப்பு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
முதல் படமான கோமாளி மூலம் கவனம் ஈர்த்த பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக லட் டுடே படத்தை இயக்கினார். சமீபத்தில் வெளியான இந்தப் படம், சூப்பர் டூப்பர் ஹிட அடித்தது. மேலும் ஓடிடியில் வெளியான பின்னரும் கூட திரையரங்குகளில் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. முன்னதாக பிரதீப் ரங்கநாதனை வீட்டுக்கு அழைத்து பாராட்டியிருந்தார் ரஜினி.அப்போது அவர் கோமாளி படத்தில் தன்னை கலாய்த்து ஒரு சீன் வைத்ததையும் பிரதீப் ரங்கநாதனிடம் ரஜினி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அப்போது ரஜினிக்கு பிரதீப் ஒரு ஒன்லைன் சொல்லியிருந்ததாகவும், அது அவருக்குப் பிடித்துவிட்டதாகவும் தெரிகிறது.இதனையடுத்து லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரனிடம் கதை சொல்வதற்காக லண்டன் சென்றுள்ளாராம் பிரதீப். ரஜினியும் பிரதீப் படம் விஷயம் தொடர்பாக சுபாஸ்கரனிடம் பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் இந்தக் கூட்டணி அமைவது உறுதி என்றும், சீக்கிரமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிகிறது. இந்த நிலையில், தான் லவ் டுவே படத்திற்கு இசையமைத்த யுவன், ரஜினி - பிரதீப் கூட்டணியில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இளையராஜா, தேவாவுக்குப் பிறகு ஏஆர் ரஹ்மான், அனிருத், சந்தோஷ் நாரயணன் பக்கம் சென்ற ரஜினி, முதன்முறையாக யுவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கவுள்ளாராம். இது யுவனின் கேரியரில் மிகப் பெரிய அதிசயமாக இருக்கும் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!